2024 ஐ.பி.எல். தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் ஏப்ரல் 16 மோதின. அதில், ராஜஸ்தான் அணி கடைசிப் பந்து வரை போராடி வெற்றி பெற்றது. அதற்க்கு ஜோஸ் பட்லர் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்தது, இதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் கிடைத்தது. ஆட்டநாயகன் விருதை பெற்றவுடன் அவர் தோனி மற்றும் கோலியை மேற்கோள் கட்டி பேசியது இந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஜோஸ் பட்லர், 6 சிக்ஸர்கள், 9 ஃபோர்களை அசராமல் தெறிக்கவிட்டு இறுதி வரை களத்தில்ஆடி 60 பந்துகளுக்கு 107* ரன்கள் விளாசி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற காரணமாக இருந்தார். ஜோஸ் பட்லர்ரின் ஆட்டம் எதிரணி உட்பட அனைவரும் மெய் சிலிர்க்க வைத்தது.
ஆட்ட நாயகன் விருதைப் பெறும் போது பேசிய ஜோஸ் பட்லர், “தொடர்ந்து நம் மீது நாம் நம்பிக்கை வைப்பதுதான் வெற்றி பெறுவதற்காக வழி. தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ஆனால், எனக்கு எப்போதெல்லாம் எதிர்மறையான சிந்தனைகள் வருகிறதோ, அப்போதெல்லாம் நான் அதற்கெதிராக நேர்மறையான விசயங்களைப் பற்றிச் சிந்திப்பேன். அதுதான் எனக்கு மன உறுதியைத் தருகிறது. அதைத்தான் நான் மைதானத்தில் செய்தேன். அமைதியாக, பொறுமையுடன் கடைசிவரை களத்தில் நிற்க வேண்டும் என்று நினைத்தேன் என பெய்து மட்டுமில்லாமல்,
ஐ.பி.எல் போட்டிகளில் தோனியும், விராட் கோலியும் அணியை வெற்று பெறச் செய்யக் கடைசி வரை நின்று போராடுவதைப் பார்த்திருப்போம். அதைத்தான் நானும் செய்ய நினைத்தேன். என இந்திய வீரரர்களை மேற்கோள் கட்டி பேசியது வரவேற்பை பெற்றுள்ளது.
பயிற்சியாளர் சங்ககாரா அறிவுரைகளை வழங்கி ஊக்கப்படுத்தினார். ‘களத்தில் கடைசிவரை நின்றால் போதும் ரன்கள் தானாகவே ஏறும், நிச்சயம் அணி வெற்றி பெறும்’ என்று அவர் என்னிடம் கூறியிருந்தார். அணிக்காகக் கடைசிவரை களத்தில் நின்று விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியே பெற முடியாது என்ற நிலையில் இருந்து வெற்றிக்கு அணியை கூடி சென்ற ஜோஸ் பட்லர் ஆட்டம் அவருக்கு 20 ஓவர் உலக கோப்பை 2024 இல் விளையாட நல்ல ஊக்கத்தை கொடுக்கும் என கிரிக்கெட் சாணக்கியர் தெரிவித்து உள்ளனர்.