நீண்ட காலமாக நாசா தனது ஆராய்ச்சியை பல்வேறு கோள்களில் மேற்கொண்டு வருகிறது, இந்த நிலையில் செய்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளதா இல்லையா என்ற தேடலில் நாசா அடுத்த கட்ட முடிவை செய்ய தயாராகியுள்ளது அதற்காக செய்வாய் கிரகத்தில் உள்ள மண் மற்றும் பறை மாதிரிகளை பூமிக்கு கொண்டுவந்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளது.
2040-ஆம் ஆண்டுக்கு முன் செவ்வாயின் பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர இப்பொது உள்ள நிதியயை வைத்து முடியாது என்றும், இந்த ஆராய்ச்சிக்கு 91,800 கோடி ரூபாய் அதாவது 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவழிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த தொகையை விட குறைந்த செலவில் செய்ய வேறுமாதிரியான திட்டங்களை செயல் படுத்த நாசா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த செயலை செய்ய நாசா பல்வேறு மாற்றமான முடிவுகளை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்க்கான நடைமுறைகளை இந்த ஆண்டு இறுதிக்குள் செய்யவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
பல தசாப்தங்களாக செய்யப்பட்டு வரும் கோள்கள் ஆராய்ச்சியில், செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியாக உலக நாடுகளால் பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் இது முக்கிய சாதனையாக இருக்கும்.
இதேபோல் அப்பல்லோ விண்கலத்தில் இதற்க்கு முன் நிலவுக்குச் சென்ற விண்வெளி வீரர்கள் அங்கிருந்து பூமிக்கு கொண்டுவந்த பாறைகள், ஆரம்பகாலக் கட்டத்தில் சூரிய குடும்பம் பற்றிய நமது புரிதலில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி கோள்கள் பற்றிய ஆராய்ச்சியை இன்னும் மேம்படுத்தின .
சிவப்பு கோளான செய்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை பூமியில் வைத்து ஆராய்ச்சி செய்யும் பொது வேற்றுகிரகத்தில் உயிரினங்கள் வாழும் சத்திய கூறுகளை நம்மக்கு உறுதிப்படுத்தும்.
நிதி நிலைமையை கருத்தில் கொண்டு செய்வாய் கிரகத்தில் உள்ள பாறை மாதிரிகளை பூமிக்கு கொண்டுவருவது கடினம் என்று நாசா ஒப்புக்கொண்டுள்ளது அதற்க்கான மாற்று திட்டங்களையும் கூடிய விரைவில் தெரிவிப்பதாக நாசா தெரிவித்துள்ளது.